- கோவிலில் தூங்க கூடாது.
- தலையில் துணி, தொப்பி அணியகூடாது.
- கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.
- விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது.
- அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.
- .குளிக்காமல் கோவில் போககூடாது.
- கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது.
- கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது.
- மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.
- கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.
- படிகளில் உட்கார கூடாது.
- சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது.
- வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது.
- மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.
- ஆசூசம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க செல்லக்கூடாது.
- கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.
- புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
- கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
- தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
- சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
- தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
- எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
- கோவில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யும்போது அலக்காராச்சாரியார் தவிர ஏனையோர் பார்த்தல் ஆகாது.
- அபிஷேக தீர்த்தத்தை காலால் மிதித்தல்,தும்புத்தடி போன்றவற்றால் தீண்டுதல் கூடாது அபிஷேகதீர்த்தம் புனிதமானது.
- பிளாஸ்டிக்மாலைகளால் சுவாமி சிலைகளில் படுமாறு அலங்காரம் செய்தல் கூடாது.
——இன்னும் வரும்——