ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி ,நட்சத்திரம் விசேஷமானது. அதைப்போல மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை திதி மிகவும் முக்கியமானது ஆகும். இறந்த ஆன்மாவின் வருஷ திதிவரும் நாட்களிலும் இவ்வாறு செய்தல் வேண்டும்.
அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் என இந்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால் இதை அமாவாசை தினத்தன்று தவிர்க்க சொல்கிறார்கள்.
இவை பித்ருக்களுக்குப் பிடிக்காததும் கூட…
ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். *ஸர்வம் சிவார்ப்பணம்🙏🙏🙏
மேலும் பித்ருக்களுக்குரிய சமையல் முறையென்று ஒன்று உளது அதன்படி பரிபக்குவமாக சமைத்து படைக்கும் வரை மூடிவைத்தல் வேண்டும். முறையானவகை இவையெல்லாம் அர்ப்பித்த பின்புதான் அனைவரும் உணவுஅருந்துதல் வேண்டும்.🙏🙏🙏
