இன்று, நமது மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர்-அதாவது சுமார் 100 கோடி மக்கள்- பசிக் கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு உணவு உற்பத்தி குறைவு , உணவு பொருட்களை உரிய முறையில் பங்கிடாமை போன்றவையே பட்டினிகளுக்குக் காரணமாக உள்ளதாக, உலக உணவு உற்பத்தி குறித்த அண்மைய அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.
எதிர்கால மக்கட் தொகை 200 முதல் 300 கோடி வரையில் அதிகரிக்குமாயின் அதற்கான உணவுத் தேவை இன்று உள்ளதைப் போல் இருமடங்காக இருக்கும் என்பதே ஆய்வாளர்களது அச்சமாகும். மக்களில் பல கோடி பேர் பசியால் வருந்தவும், உரிய ஊட்டச் சத்தின்றி இறக்கவும் வாய்ப்புள்ளது. உணவின்றி வாடும் மக்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்று விடாது இனி வரும் காலங்களில் ஏற்படப் போகும் மிதமிஞ்சிய உணவுத் தேவையையும் ஈடு செய்யும் வகையிலும் செயல்பட வேண்டும்ஒரு புறம், நமது உணவுத் தேவையினை நிறைவு செய்ய வேண்டும். அதே சமயம்,அதன் விளைவாய் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினைத் தவிர்க்கும் வழிவகைகளிலும் நாம் முனைப்புக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. இல்லையெனில் வயிற்றுக்கு உணவு அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நோயுறும் மக்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்
உலகளாவிய உணவுத்தேவை பெருகிவரும் இவ்வேளை சுற்றுப்புறச்சூழல் மாசடைதலையும் தவிர்த்து நகர்தல் இன்றைய காலக்கட்டாயமாகும். அறிவியல் இவ்வாறு செயற்தடுமாறு காணும்போது ஆன்மீகம் அதனுறுவகை ஆற்றல் வேண்டும். உணவு சிக்கனம்பற்றி ஒவ்வொரு சமய நிறுவனங்களும் தினம் தினம் போதிக்கவேண்டும். உணவு வீணடிக்கப்படுதல், எதிர்கால உணவுத்தேடலுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்துதல் வேண்டும்.
உணவின் அருமை உணர்த்தியே எம்முன்னோர்கள் விரதம் முதலான நற்பழக்க வழக்கங்களையும், பட்டினி இருத்தல் (நோன்பு) போன்ற ஆன்மீக நற்செயல்களையும் போதித்தனர் எனலாம்.
இன்று உலக உணவுத்தேவை நோக்கி வளர்முக நாடுகள் நகர்வதாக காட்டிக்கொண்டு கட்டிடப்பெருக்கங்களை அதிகரிப்பதற்காகவே காடுகளை அழிக்கின்றன. உணவுப்பெருக்கம் என ஊட்டம் எதுவுமின்றிய சக்கை உணவுகளை உற்பத்தி செய்து இளஞ்சந்ததியினரை அழித்துக்கொண்டு அரசியல் நடத்தும் கபட உலகம் . பணப்பற்றாக்குறை, கடினவேலைப்பளு என த(டு)(டம்)மாறும் இளம் பெற்றோர்.
இது ஒரு மாயவலையில் மாட்டிக்கொண்ட மானுடம், என்ன செய்யப்போகிறது?
உணவு உற்பத்தியில் வளர்ச்சி காணும்போது தூய நீரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நீரில் 70 விழுக்காடு விவசாயத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியினைப் பெருக்குவதாயின் அதற்குத் தேவையான நீரின் அளவும் அதிகரிக்கவே செய்யும். எனவே நீரின் தேவை சுமார் 80 முதல் 90 வீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் இன்று உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் பல வற்றிச் செயலற்றுப் போகும். நிலத்தடி நீரும் காலப்போக்கில் இல்லாது போகவும் வாய்ப்புகள் உள்ளன. இன்று அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆறுகள் வற்றிப் போவதற்கு இதுவும் ஓர் காரணமாகச் சொல்லப்படுகிறது.ஆற்று நீரில் 1960 களில் இருந்ததைப் போன்று இருமடங்காக நைதரசன் மற்றும் பொஸ்பரஸ் இரசாயனக் கலப்பு ஏற்பட்டிருப்பதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது ஆற்றின் முகத்துவாரங்களில் வாழும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இராசயன கலப்பற்ற சுய உணவு உற்பத்தி ,உயிர்ப்புள்ள உணவு உருவாக்கம் , நீரை அளவுறப்பயன்படுத்தல், உணவை விரயம் செய்யாமை, கட்டிட பெருக்கத்தை குறைத்தல், தூய விவசாயத்தை ஊக்குவித்தல் என்பவை மேற்சொன்ன தாக்கங்களை குறைக்க ஏதுவாகலாம்.
சுபமங்களம்
