நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள்.
அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
- ஆதுலர் சாலை – ஏழைகளுக்கான தர்ம விடுதி
- ஓதுவார்க்கு உணவு – படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு
- அறு சமயத்தார்க்கு உணவ – அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு
- பசுக்கு உணவு
- சிறைச் சோறு – சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு
- ஐயம் – பிச்சையிடல்
- திண்பண்டம் வழங்கல்
- அறவைச் சோறு – அனாதைகளுக்கு உணவளித்தல்
- மகப்பெறுவித்தல் – பிரசவம் பார்த்தல்
- மகவு வளர்த்தல் – குழந்தைகள் வளர்த்தல்
- மகப்பால் வளர்த்தல் – குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்
- அறவைப் பிணஞ்சுடுதல் – அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்
- அறவைத் தூரியம் – அனாதைகளுக்கு உடையளித்தல்
- சுண்ணம் – வெள்ளை கொத்தல்.
- நோய் மருந்து – வைத்தியம்
- வண்ணார் – ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்
- நாவிதர் – ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்
- கண்ணாடி – முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி
- காதோலை
- கண் வைத்தியம்
- தலைக்கெண்ணெய்
- பெண்போகம் – காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்
- பிறர் துயர்காத்தல்
- தண்ணீர்ப் பந்தல்
- மடம் (சத்திரம்)
- தடம் ( சாலை அமைத்தல்)
- சோலை ( கோட்டம் வளர்த்தல்)
- ஆவுரிஞ்கதறி – பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்
- விலங்கிற்கு உணவு – சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்
- ஏறுவிடுதல் – நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்
- விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்
- கன்னிகாதானம் – கல்யாணம் செய்து வைத்தல்.
