நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள்.
அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?

  1. ஆதுலர் சாலை – ஏழைகளுக்கான தர்ம விடுதி
  2. ஓதுவார்க்கு உணவு – படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு
  3. அறு சமயத்தார்க்கு உணவ – அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு
  4. பசுக்கு உணவு
  5. சிறைச் சோறு – சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு
  6. ஐயம் – பிச்சையிடல்
  7. திண்பண்டம் வழங்கல்
  8. அறவைச் சோறு – அனாதைகளுக்கு உணவளித்தல்
  9. மகப்பெறுவித்தல் – பிரசவம் பார்த்தல்
  10. மகவு வளர்த்தல் – குழந்தைகள் வளர்த்தல்
  11. மகப்பால் வளர்த்தல் – குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்
  12. அறவைப் பிணஞ்சுடுதல் – அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்
  13. அறவைத் தூரியம் – அனாதைகளுக்கு உடையளித்தல்
  14. சுண்ணம் – வெள்ளை கொத்தல்.
  15. நோய் மருந்து – வைத்தியம்
  16. வண்ணார் – ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்
  17. நாவிதர் – ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்
  18. கண்ணாடி – முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி
  19. காதோலை
  20. கண் வைத்தியம்
  21. தலைக்கெண்ணெய்
  22. பெண்போகம் – காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்
  23. பிறர் துயர்காத்தல்
  24. தண்ணீர்ப் பந்தல்
  25. மடம் (சத்திரம்)
  26. தடம் ( சாலை அமைத்தல்)
  27. சோலை ( கோட்டம் வளர்த்தல்)
  28. ஆவுரிஞ்கதறி – பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்
  29. விலங்கிற்கு உணவு – சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்
  30. ஏறுவிடுதல் – நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்
  31. விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்
  32. கன்னிகாதானம் – கல்யாணம் செய்து வைத்தல்.