சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் (இன்று) சிவ தரிசனம் செய்யலாம். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் . நாள் முழுக்க நீர், உணவு தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மாலை சிவன் கோவிலுற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு, பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.
மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதத்தில் வரும் சோம வார விரதம் இருப்பதும், சோம வாரத்தில் வரும் பிரதோஷத்தன்று விரதம் இருப்பதும் பல மடங்கு அதிகமான பலனை தரும். கார்த்திகை சோம வாரத்தன்று சிவன் கோவில்களில் நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறும். சிவனுக்கு பிரியமான சங்காபிஷேகம் நடத்தப்படும். பிரதோஷ தினத்தில் சங்காபிஷேகம், பிரதோஷ கால அபிஷேகங்களை காண்பது அனைத்து விதமான துன்பங்களையம் போக்கி, சகல செளபாக்கியங்களையும் பெற்றுத் தரும்
