விளக்கிலே மஹாலக்ஷ்மி வாசம் புரிகிறாள். அத்துடன் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற மூலமூவர்களும் வாசம் செய்கிறார்கள். விளக்கு கொழுத்துதல் என்று சொல்லுதல் தவறு. விளக்கு ஏற்றுதல் என்றும், விளக்கை அணைப்பதை மலர்வித்தல், நிறைத்தல் என்றும் கூறவேண்டும். விளக்கின் அடிப்பாகம் பிரம்மாவினுடையது. விளக்கின் முழுப்பாகமும் சுத்தமாக இருத்தல் வேண்டும் சிலர் அடிபாகத்தில் ஏற்றிய குச்சிகளை போட்டுவைப்பார்கள். இது தவறு.
